ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சி அமைப்புக்கும் தொடர்ந்து மோதல் முற்றி வருகிறது. பெப்சி அமைப்புக்கு எதிராக புதிதாக தொழிலாளர் சங்கம் ஒன்றை ஏற்படுத்த தயாரிப்பாளர் சங்கம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்ற கூடாது, ஒத்துழைப்பு வழங்க கூடாது என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி பெப்சி கடிதம் அனுப்பி இருந்தது.
இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படப்பிடிப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெப்சிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
வழக்கின் மனுவில், "பெப்சி அமைப்புக்கு எதிராக சில தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளது. அதற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறி பெப்சி அமைப்பினர் ஒத்துழைப்பு வழங்க மறுப்பது சட்ட விரோதமானது.
இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பு பணிகள் முற்றிலும் முடங்கி, மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளை எந்தவித இடையூறும் இல்லாமல் முடித்துக் கொடுக்குமாறு பெப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும்.
படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளில் தலையிட பெப்சிக்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் மே 7ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பெப்சி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட 24 சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.