ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாக சைதன்யா. சில மாதங்களுக்கு முன் இவர் நடித்த ‛தண்டேல்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது தனது 24 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தேவ் கட்டா இயக்கும் மாயசபா என்ற அரசியல் கலந்த வெப்சீரிஸில் நாக சைதன்யா நடிப்பதாக சில தினங்களாக செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை, இந்த படத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நாக சைதன்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாக சைதன்யா தற்போது கார்த்திக் வர்மா இயக்கத்தில் தனது 24வது படத்தில் நடிக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் மர்மங்கள் கலந்த சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக உருவாகிறது. இதை பி.வி.எஸ்.என். பிரசாத் சுகுமார் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படம் பற்றிய முன்னோட்ட வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.