ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, மற்ற மொழி சினிமாவிலும் முன்னணி கதாநாயகர்களுக்கான சம்பளம் மிக அதிகமாக உள்ளது. தமிழில் சில நடிகர்கள் 100 கோடிக்கும் அதிகமாக ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகிறார்கள். ஓரிரு நடிகர்கள் 200 கோடிக்கும் அதிகமாக வாங்குவதாக ஒரு தகவல் உண்டு. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது.
கதாநாயகர்களுக்கு 100 கோடிகளுக்கு மேல் சம்பளம் கொடுக்கத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் கதாநாயகியருக்கு அதில் பத்தில் ஒரு பகுதியைக் கொடுக்கத் தயங்குவது வழக்கமாக உள்ளது. ஒன்று கதாநாயகர்களுக்கு சம்பளத்தைக் குறைக்க வேண்டும், அல்லது கதாநாயகிகளுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும். ஆனால், அது இரண்டுமே நடக்காது. மாறாக கதாநாயகிகள் மிக அதிக சம்பளம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை திரையுலகில் முன் வைக்கிறார்கள்.
கதாநாயகனுக்கு இணையாக கதாநாயகியருக்கும் படத்தில் காட்சிகள் உண்டு. சில கதாநாயகிகளை கிளாமர் காட்ட வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் ஒப்பந்தம் செய்வதும் நடக்கிறது. ஒரு ஆணாதிக்க மனோபாவத்தில்தான் திரையுலகம் இயங்குவதாக சில கதாநாயகிகளும் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.
தற்போது தெலுங்குத் திரையுலகத்திலிருந்து ஒரு தகவல் பரவி வருகிறது. அது சிரஞ்சீவி அடுத்து நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா 20 கோடி வரை சம்பளம் கேட்கிறார் என்பதுதான் அது. அப்படத்தில் நடிக்க சிரஞ்சீவிக்கு 100 கோடிக்கும் அதிகமான சம்பளம் என்கிறார்கள். நயன்தாரா அதிக சம்பளம் கேட்பதால் அவருக்குப் பதிலாக சுமார் 10 கோடி வரையில் சம்பளம் கேட்கும் கதாநாயகியைத் தேடி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
நயன்தரா என்பதால் இப்படியான தகவல் பரவுகிறதா என்ற கேள்வியும் ஒரு பக்கம் வருகிறது.