சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரித்த படம் 'நல்லவனுக்கு நல்லவன்'. இந்த படத்தில் 'முரட்டுக்காளை' படத்தில் ஜெய்சங்கரை வில்லன் ஆக்கியது போன்று ஒரு ஹீரோவை ரஜினிக்கு வில்லன் ஆக்குவது என்று ஏவிஎம் முடிவு செய்தது. இதற்காக தேர்வானவர் அப்போது இளம் நடிகராக வளர்ந்து வந்த கார்த்திக்.
ஏவிஎம் சரவணன், கார்த்திக்கை சந்தித்து பேசினார். 'ஏவிஎம் நிறுவனத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஆனால் நான் வில்லனாக நடித்தால் எனது இமேஜ் போய்விடும், அதன்பிறகு வில்லனாக மட்டும் நடிக்க கூப்பிடுவார்கள்' என்று கூறி நடிக்க மறுத்தார்.
இதற்கு பதில் அளித்த சரவணன் 'அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்த படத்தில் வில்லனாக நடியுங்கள், அடுத்து உங்களை ஹீரோவாக போட்டு ஒரு படம் எடுப்போம், அதை எஸ்.பி.முத்துராமனே இயக்குவார். அந்த படத்தின் கதை உங்கள் வில்லன் இமேஜை உடைப்பதாக இருக்கும்' என்றார். அதன்பிறகு கார்த்திக் நடிக்க சம்மதித்தார்.
கார்த்திக்கு கொடுத்த வாக்குறுதிக்காக கார்த்திக் நடிக்க, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான படம் 'நல்லதம்பி'. இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து கார்த்திக் ஹீரோவாக நடித்தார்.