மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம்தான் பாடத் திட்டங்களை வரையறை செய்து வருகிறது. சமீபத்தில் 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்கள், டில்லி சுல்தான்களின் வரலாறு நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இதுகுறித்து மாதவன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "பள்ளியில் வரலாறு படித்தபோது முகலாயர்கள், ஹரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகங்கள், பிரிட்டிஷ் ஆட்சி, சுதந்திர போராட்டத்தை பற்றி பல அத்தியாயங்கள் இருந்தன. ஆனாலும் சேர, சோழ, பாண்டியர்கள் பற்றி ஒரே ஒரு அத்தியாயமே இருந்தது.
ஆங்கிலேயர்களும், முகலாயர்களும் நம்மை 800 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஆனால் சோழ பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது. நமது வரலாற்றின் அந்த பகுதி எங்கே? தமிழ் மன்னர்களின் வீரம் செறிந்த வரலாற்று எங்கே போனது? உலகின் பழமையான மொழியான தமிழ் பற்றி யாருக்கும் தெரியாது. நமது கலாசாரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அறிவு தற்போது கேலி செய்யப்பட்டு வருகிறது'', என்று தெரிவித்துள்ளார்.