ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் விஜய் தேவரகொண்டா சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் ரெட்ரோ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தபோது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து தனது உணர்வை வெளிப்படுத்தி பேசும்போது, பாகிஸ்தானுக்குள்ளேயே அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள், அவர்கள் 500 வருடத்திற்கு முன்பு ஆதிவாசிகள் அடித்துக் கொண்டது போல அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்வார்கள் என்று கூறியிருந்தார்.
அதேசமயம் அவர் ஆதிவாசிகள் என்று பயன்படுத்திய வார்த்தை பழங்குடியின மக்களை புண்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி பல அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன. அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் பேசிய வார்த்தை இந்த அளவுக்கு சர்ச்சை ஆகும் என எதிர்பார்க்காத விஜய் தேவரகொண்டா, அது குறித்து தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் எந்த உள்நோக்கத்துடனும் பழங்குடியினரை சிறுமைப்படுத்தும் விதமாக அந்த நிகழ்வில் பேசவில்லை. என்னுடைய பேச்சின் நோக்கம் நம்முடைய ஒற்றுமை, தேச பாதுகாப்பு குறித்து தான் இருந்தது. அதை உதாரணப்படுத்தி பேசுவதற்காக தான் அப்படி ஒரு வார்த்தையை நான் பயன்படுத்தினேனே தவிர, யாரையும் அவமதிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி என்னுடைய வார்த்தைகள் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.