ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

கடந்த வருடம் மலையாளத்தில் பணி என்ற படம் வெளியானது. மலையாள திரையுலகில் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வரும் ஜோஜூ ஜார்ஜ் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்ததுடன் முதன்முறையாக இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். நாடோடிகள் அபிநயா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பழிவாங்கும் கதையம்சத்துடன் வெளியான இந்த படத்தின் கதை விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. தமிழிலும் கூட இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தற்போது சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ, அடுத்தபடியாக வெளியாக இருக்கும் கமலின் தக் லைப் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடைய அடுத்த படம், புதிய கதை... புதிய இடங்கள்.. புதிய கதாபாத்திரங்கள்.. பணி-2 விரைவில்” என்று கூறியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.