ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'ரெட்ரோ'. படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தும், ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தவில்லை. நெகட்டிவ்வான விமர்சனங்களும் படத்தின் வசூலை பாதித்தது. இருந்தாலும் 100 கோடி வசூலைக் கடந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று இரவு சென்னையில் பத்திரிகையாளர்களை 'ரெட்ரோ' படக்குழு சந்திக்க உள்ளது. ஆனால், நிகழ்ச்சி அரங்கிற்குள் கேமராவிற்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் முன்பு நன்றி தெரிவித்து பேசும் நிகழ்வும் நடக்க வாய்ப்பில்லை என்று விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. ஒரு 'கெட் டு கெதர்' போல நன்றி தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி பதில் என்று நிகழ்த்தினால் தேவையற்ற கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு என நினைக்கிறார்களாம். இப்படத்திற்கான நெகட்டிவிட்டியை வேண்டுமென்றே சிலர் பரப்புகிறார்கள் என்றும் படக்குழு வருத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. மற்ற மொழிகளில் கூட சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோர் பற்றியும் இப்படத்தின் தொடர்பாக நெகட்டிவ் செய்திகளை வெளியிட சில போட்டி நடிகர்கள், நடிகைகளின் ஆதரவுடன் சிலர் செய்வதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.