சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 1, 2' படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது, விருதுகளையும் பெற்றது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீரா' என்ற பாடல் காப்புரிமை பிரச்சினையில் சிக்கியது. பாலிவுட் பாடகர் பயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், வீரா ராஜ வீரா பாடல், தனது தாத்தா நசீர் பயாசுதீன் தாகர் மற்றும் தந்தை ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் 1970ல் இசையமைக்கப்பட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது' என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில் பாடலின் மூலப்பதிவை ஏ.ஆர்.ரஹ்மான் கோர்ட்டில் சமர்ப்பித்திருந்தார். அதை கேட்ட நீதிபதிகள், வரிகள் தனித்தனியாக இருந்தாலும் ராகம் ஒன்றுதான் எனவே காப்புரிமை சட்டப்படி ஏ.ஆர்.ரஹ்மான், பயாஸ் வாசிபுதீன் தாகர் தரப்புக்கு 2 கோடி வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி கொடுக்கும் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.