ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து தற்போது மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். சாகசங்கள் கலந்த திரில்லர் கதையில் உருவாகி வரும் இதில் இந்தியானா ஜோன்ஸ் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஒரு வேடத்தில் நடிக்கிறார் மகேஷ் பாபு.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது, படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்கக் கூடாது என்று கூறி வந்த ராஜமவுலி, படப்பிடிப்பு தொடங்கிய சில வாரங்களிலேயே ஒரு பிரேக் கொடுத்தார். அதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தியவர், மீண்டும் தற்போது படக்குழுவுக்கு கோடை விடுமுறை கொடுத்திருக்கிறார்.
இந்த வாரம் இறுதியில் லண்டனில் நடைபெறும் ஆர்ஆர்ஆர் படம் தொடர்பான ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளப் போகிறார் ராஜமவுலி. அதனால் இந்த மாத இறுதியில் தான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளாராம் . அந்த வகையில், புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய குறுகிய காலத்திலேயே இரண்டு முறை பிரேக் கொடுத்திருக்கிறார் ராஜமவுலி.