ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து தற்போது மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். சாகசங்கள் கலந்த திரில்லர் கதையில் உருவாகி வரும் இதில் இந்தியானா ஜோன்ஸ் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஒரு வேடத்தில் நடிக்கிறார் மகேஷ் பாபு.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது, படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்கக் கூடாது என்று கூறி வந்த ராஜமவுலி, படப்பிடிப்பு தொடங்கிய சில வாரங்களிலேயே ஒரு பிரேக் கொடுத்தார். அதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தியவர், மீண்டும் தற்போது படக்குழுவுக்கு கோடை விடுமுறை கொடுத்திருக்கிறார்.
இந்த வாரம் இறுதியில் லண்டனில் நடைபெறும் ஆர்ஆர்ஆர் படம் தொடர்பான ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளப் போகிறார் ராஜமவுலி. அதனால் இந்த மாத இறுதியில் தான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளாராம் . அந்த வகையில், புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய குறுகிய காலத்திலேயே இரண்டு முறை பிரேக் கொடுத்திருக்கிறார் ராஜமவுலி.