தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஐகான் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்எல்பி தயாரித்துள்ள படம் 'மையல்'. ஏபிஜே.ஏழுமலை இயக்கி உள்ளார். மைனா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சேது பல வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சம்ரிதிதாரா நடித்துள்ளார். எழுத்தாளர் ஜெய மோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இசை அமைப்பாளர் சவுந்தர்யன் மகன் அமர் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் நாயகி சம்ரிதிதாரா மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருக்கிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டார் அட்ராக்ஷனாக இருந்தவர் சம்ரிதிதாரா. நிகழ்ச்சியில் பேசியவர்கள் சம்ரிதிதாரா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்றார்கள்.
குறிப்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது "சமந்தாவும் இல்லாமல் நயன்தாராவும் இல்லாமல் ஹீரோயினுக்கு இது என்ன புது பெயர் என்று யோசித்தேன். இந்த படம் வெற்றி பெற்று விட்டால் இந்த பெயரையே தொடருங்கள், இல்லாவிட்டால் பெயரை சுருக்கி வையுங்கள் என்று அவருக்கு கூறிக்கொள்கிறேன். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார். அதற்கான அழகும், திறமையும் அவரிடம் இருக்கிறது. அவருக்கு பெரிய எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்" என்றார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது "அழகு எல்லோருக்கும் அமைந்து விடும், ஆனால் அம்சம் அமையாது. இந்த படத்தின் நாயகிக்கு அழகும் இருக்கிறது, அம்சமும் இருக்கிறது. கூடவே நடிப்பு திறமையும் இருக்கிறது. இதனால் ரவிகுமார் சொன்னது போல அவர் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார். அதற்கு அவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும். அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என்றார்.