வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கும் (பெப்சி) மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பெப்சி தொழிலாளர்கள், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படப்பிடிப்புகளில் பணியாற்றக்கூடாது என்று பெப்சி அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை பெப்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் "திரைப்பட துறையை சேர்ந்த 23 சங்கங்களை உள்ளடக்கிய தொழிலாளர்கள் கூட்டமைப்பான, 'பெப்சி' அமைப்பில், 25,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகள், புதிதாக தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்க முயற்சிக்கின்றனர். இதற்காக, முதல்வர் தலைமையில் புதிய அமைப்புக்கான துவக்க விழா நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கண்டித்து, வரும் 14ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும், கண்டன ஆர்பாட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தனது திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் ரத்து செய்துள்ளது.