சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பிறகு 'கோலி சோடா' படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 10 எண்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை.
இந்த நிலையில் விஜய் மில்டன் இயக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நாயகனாக நடிக்கிறார். ரப் நோட் புரொடக்ஷன் தயாரிக்கிறது. தற்காலிகமாக படத்தின் தலைப்பாக "புரொடக்ஷன் நம்பர் 5" என வைக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து விஜய் மில்டன் கூறுகையில் “இது எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். கோலி சோடா பாணியை தொடர்ந்து இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை கொண்டு வருகிறது . ராஜ் தருண் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் தோன்றுகிறார். தமிழ் ரசிகர்களை அவருடைய நடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.