தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சி அமைப்புக்கும் மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ள நிலையில் 'தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பைத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி இருக்கிறது. இதன் தொடக்க விழா நாளை நடப்பதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்திருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள 'பெப்சி' நாளை (14-ம் தேதி) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப் போவதாக அறிவித்தது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை படப்பிடிப்புகள் நடக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பை நாங்கள் ஆரம்பிப்பது, தயாரிப்பாளர்களை, குறிப்பாக சிறு படத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான். 14ம் தேதி வேலை நிறுத்தம் என்று பெப்சி அறிவித்துள்ளது. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
நாங்கள் பெப்சி தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என்று யாரிடமும் சொல்லவில்லை. அன்று எங்கள் அமைப்பு படப்பிடிப்பை நடத்தும். தயாரிப்பாளர்கள், புதிதாக நாங்கள் தொடங்கி இருக்கிற, தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தொழிலாளர்களைப் பயன்படுத்தி ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள படப்பிடிப்புகளை நடத்துவார்கள் ” என்றார்.