தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இசையமைப்பாளர் இளையராஜா முதலில் இசையமைத்த 'அன்னக்கிளி' படம், மே 14, 1976ல் வெளியானது. அந்தவகையில் சினிமாவில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் இளையராஜா. இதுவரை ஆயிரத்து 400க்கும் அதிகமான படங்களில் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து விட்டார்.
ஆயிரக்கணக்கான மேடை கச்சேரிகளை பார்த்துவிட்டார். 5 தேசியவிருது, ஏகப்பட்ட மாநில, மற்ற விருதுகள், பத்ம விபூஷண் விருது வரை வாங்கிவிட்டார். 81 வயதிலும் கச்சேரிகள், சிம்போனி என பிஸியாக இருக்கிறார். ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருக்கிறார். இதற்கெல்லாம் மணிமகுடமாக இந்த 50வது ஆண்டில் அவருக்கு பாரதரத்னா கிடைக்க வேண்டும், வாழும் காலத்திலேயே அவர் கவுரவிக்கப்பட வேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது.
இளையராஜாவுக்கு பாரதரத்னா விருது கொடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக சில மாதங்களாக தகவல்கள் கசிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ராஜாஜி, சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், சி.வி.ராமன், காமராஜர், அப்துல்கலாம், எம்ஜிஆர், எம்.எஸ் சுப்புலட்சுமி, சி.சுப்ரமணியம் ஆகியோர் இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருது பெற்றவர்கள்.