ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் சந்தானத்தின் நண்பர் நடிகர் கூல் சுரேஷ். பல படங்களில் காமெடி கலந்த வேடங்களில் நடித்து வருகிறார். பல சினிமா மேடைகளில் படத்தை பிரபலப்படுத்த ஏதாவது காமெடியாக பேசுவார். சென்னையில் நடந்த அனல் மழை என்ற பட விழாவில், வழக்கத்துக்கு மாறாக அவர் கண்ணீர் விட்டார். அந்த படத்துக்காக அல்ல. சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம், கோவிந்தா பாடல் சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. அந்த பாடலுக்கு கடும் எதிர்ப்பு.
அதுகுறித்து பேசிய கூல் சுரேஷ், ‛‛என் நண்பன் சந்தானம் கடவுள் பக்தி உடையவர். அவர் காரில் அவ்வளவு சாமி படங்கள், வேப்பிலை இருக்கும். அவர் கோவிந்தா பாடலை அவமதிக்கமாட்டார். ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் அந்த பாடலை எதிர்க்கிறார்கள். திருப்பதிக்குள் தமிழர்களை விடமாட்டோம் என்கிறார்கள். அது தவறு. திருப்பதி பெருமாள் படத்தை வீட்டில் வைத்து கூட கும்பிடுவோம். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் ஒரு நடிகர்தான். அவருக்கு சினிமா கஷ்டம் தெரியும்.
இந்த படத்தை அவர், அவர் தரப்பு பார்த்துவிட்டு பேச வேண்டும். ஏதாவது குறைகள் இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன். என் நண்பன் சந்தானம் படத்துக்கு பிரச்னைகள் வர வேண்டாம். அது நல்ல படியாக ரிலீஸ் ஆக வேண்டும். பவன் கல்யாண் அவர்களே உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என மேடையில் விழுந்து வணங்கினார் கூல் சுரேஷ். பேசும்போது பல இடங்களில் கண் கலங்கினார்.