கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

சென்னையைச் சேர்ந்த நடிகையான சமந்தா, தெலுங்கில் பிஸியான நடிகையாக இருந்ததால் ஐதராபாத்திலேயே சொந்த வீடு வாங்கி செட்டிலானவர். பின்னர், தன்னுடைய முதல் தெலுங்குப் பட ஹீரோவான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தார். சமந்தாவுக்கும், அவர் நடித்த வெப் சீரிஸ்களை இயக்கிய ராஜ் நிடிமொரு என்பவருக்கும் காதல் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகின. இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமந்தா சமூக வலைத்தளங்களில் வெளியிடவே அதைப் பலரும் உண்மை என நம்பினார்.
இதனிடையே, அவர்கள் இருவரும் ஒன்றாக வசிப்பதற்காக வீடு தேடிக் கொண்டிருப்பதாகவும் கூட செய்திகள் பரவின. சமந்தாவின் மேனேஜர் அந்த காதல் விவகாரம் வெறும் வதந்தி தான் என சொன்னதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ராஜ் நிடிமொரு, ஷியாமலி என்ற சினிமா உதவி இயக்குனரை ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டவர். அவர்கள் பிரிந்து வாழ்கிறார்களா அல்லது விவகாரத்து பெற்றுவிட்டார்களா என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் ஷியாமலி சமூக வலைத்தளத்தில், “என்னைப் பற்றி நினைக்கும், என்னைப் பார்க்கும், என்னைப் பற்றிக் கேட்கும், என்னுடன் பேசும், என்னைப் பற்றிப் பேசும், என்னைப் பற்றிப் படிக்கும், எழுதும், இன்று என்னைச் சந்திக்கும் அனைவருக்கும் நான் அன்பையும், வாழ்த்துகளையும் அனுப்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதுவும் சேர்ந்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஷியாமலி பதிவில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் என்னைப் பற்றி என்ன வேணாலும் பேசுங்க, உங்களுக்கு என் வாழ்த்துகள் என அதை கடந்து போவதையே இப்படி குறிப்பிட்டுள்ளார்.