ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் |
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் சிம்ரன். அப்போது இளம் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்கள், சீனியர் நடிகர்களுடன் சில படங்கள் என உச்சத்தில் இருந்தார். திருமணமான பின் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தாலும் அவருக்கான சரியான படங்கள் அமையவில்லை. அந்த ஏக்கத்தை 'டூரிஸ்ட் பேமிலி' படம் மாற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் மீண்டும் அடுத்த கட்ட ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவும் அவர் தயாராக இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.
'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய புரமோஷன்களில் அவர் அதிகம் கலந்து கொள்ளவில்லை. வெளிநாட்டில் இருந்ததுதான் அதற்கு ஒரு காரணம். ஆனால், படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நடந்த போது அதில் கலந்து கொண்டு உருக்கமாகப் பேசினார் சிம்ரன்.
நிகழ்ச்சிக்கு சிம்ரன் வந்த போது அவருடன் டிவி நடிகை ஆனந்தியும் கூடவே வந்திருந்தார். சிம்ரனின் பெண் பவுன்சர் போல பக்கத்திலேயே இருந்தார். விசாரித்த போது சிம்ரனுக்கு கடந்த சில வருடங்களாக மேனேஜர் போல எப்போதும் துணையாக ஆனந்தி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.