சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சினிமாவில் 30 ஆண்டுகளை தொடுவது, 30 ஆண்டுகளை தாண்டி இன்றும் வெற்றிகரமாக இருப்பது என்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அந்தவகையில் சினிமாவில் 30வது ஆண்டை தொட்டு இருக்கிறார் சுந்தர்.சி. அவர் இயக்கிய முதல் படமான 'முறைமாமன்' 1995ம் ஆண்டு வெளியானது. அதில் ஜெயராம், குஷ்பு நடித்து இருந்தனர்.
'அரண்மனை 4, மதகஜராஜா, கேங்கர்ஸ்' படங்களின் வெற்றிக்குபின் இப்போது நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்திஅம்மன் 2' படத்தை இயக்கி வருகிறார். சுந்தர்.சியின் கடைசி மூன்று படங்களுமே வர்த்தக ரீதியில் வெற்றி, தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்த படம். இப்போது இயக்கும் மூக்குத்திஅம்மன் 2, பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதில் அம்மன், போலீஸ் ஆபீசர் என 2 வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
30 ஆண்டை தொட்ட சுந்தர்.சிக்கு திரையுலகினர் வாழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் தங்கள் 25வது திருமண நாளை கொண்டாடிய குஷ்புவும், 'உங்கள் சினிமா வெறும் காமெடி மட்டுமல்ல, தமிழ் சினிமாவை பண்படுத்தியுள்ளது' என்று சுந்தர்.சி நடித்த படங்களின் முக்கியமான காட்சிகளை வெளியிட்டு அவர் காதல் மனைவி குஷ்புவும் வாழ்த்தியுள்ளார்.