தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஒரு காலத்தில் கமலுக்கு போட்டியாக கொண்டு வரப்பட்டவர்தான் மோகன். கமலின் கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் மோகனிடம் சென்ற காலமும் இருந்தது.
கர்நாடகாவை சேர்ந்த மோகனுக்கு தமிழ் அவ்வளவாக பேச வராது. அவரது குரலும் அவரது தோற்றத்துக்கு ஏற்ற குரலாக இல்லாமல் இருந்தது. இதனால் அவருக்கு எஸ்.என்.சுரேந்தர் (விஜய்யின் தாய்மாமன்) குரல் கொடுத்தார். எஸ்.என்.சுரேந்தர், நடிகராகவும், பாடகராகவும் இருந்தார். அவர் மோகனுக்கு 70 படங்கள் வரை டப்பிங் பேசினார்.
மோகன் முதன் முதலில் நடித்ததே கமலுடன்தான். பாலுமகேந்திரா இயக்கிய 'கோகிலா' என்ற கன்னட படத்தில் கமலுடன் நடித்தார் . பின்னர் நடிக்கவில்லை. அதன் பிறகு 1984ம் ஆண்டு வெளிவந்த 'ஓ மானே மானே' என்ற படத்தில் மோகனுக்காக 'பொன்மானைத் தேடுதே என் வீணை பாடுதே' என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார் கமல்.
இந்த பாடலை கமல் பாடியது குறித்து ஒரு சுவையான தகவல் உண்டு. வேறு படத்தின் பாடல்கள் குறித்து இளையராஜாவுடன் பேச பிரசாத் ஸ்டூடியோ சென்றார் கமல். அப்போது இளையராஜா 'பொன்மானை தேடுதே' பாடலின் ஒத்திகையில் இருந்தார்.
பாடல் ரொம்ப பிரமாதமாக இருக்கிறதே யார் பாடுகிறார்கள் என்றார் கமல். யாரையும் முடிவு செய்யவில்லை உனக்கு பிடிச்சிருந்தா நீயே பாடிவிடு என்றார் இளையராஜா . கமலும் ஒப்புக் கொண்டார். ஆனால் இந்த பாட்டுக்கு நடிக்கப்போவது மோகன் என்றாராம் இளையாராஜா. 'யாரு நடிச்சா என்ன பாட்டு உங்களோடதுதானே' என்ற கமல் உடனே பாடிக் கொடுத்தாராம்.