தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்து சில நாட்களுக்குப் முன்பு திரைக்கு வந்த படம் 'மாமன்'. இந்த படத்தை இன்னும் ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக சூரி தமிழகத்தில் ஒரு சில முக்கியமான தியேட்டர்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுடன் படத்தை பார்க்கிறார்.
அந்த வகையில் நேற்று 'மாமன்' படத்தை நெல்லையில் உள்ள பிரபலமான தியேட்டரில் சூரி ரசிகர்களுடன் படம் பார்த்து வெளிவரும் போது செய்தியாளர்களைச்
சந்தித்தார். அப்போது அவரிடம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூரி கூறியதாவது, "இதுவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கதை நல்லா இருக்கும் பட்சத்தில் எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வில்லன் கதாபாத்திரத்திலும் நடிப்பேன். பழைய இயக்குனர், புதிய இயக்குனர் என்று எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இன்றைக்கு புதிய இயக்குனர்கள் பல வெற்றி படங்களை தருகிறார்கள்" என தெரிவித்தார்.