ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து, மற்றும் பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார் திரிஷா. இதில் பொன்னியின் செல்வனில் அவர் நடித்த குந்தவை கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கியுள்ள 'தக்லைப்' படத்திலும் நடித்திருக்கிறார் திரிஷா.
இப்படத்தின் டிரைலரில் அவரது கேரக்டர் கவனம் பெற்றது. மணிரத்னம் அளித்த ஒரு பேட்டியில், தக்லைப் படத்தில் திரிஷா நடித்துள்ள வேடம் குறித்து கூறுகையில், ''இந்த படத்தில் திரிஷாவுக்கு ஒரு வித்தியாசமான வேடம். குறிப்பாக பொன்னியின் செல்வனில் இருந்து ஒரு ஆப்போசிட்டான வேடத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது கேரக்டர் குறித்து முதலில் அவரிடம் சொன்னபோது, அது அவரை இம்ப்ரஸ் பண்ணியது. அதனால் இந்த வேடத்தை மிகவும் பிடித்து நடித்திருக்கிறார்'' என்று கூறியுள்ளார் மணிரத்னம். அதனால் தக்லைப் படத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த குந்தவை வேடத்தில் இருந்து ஒரு மாறுபட்ட, அதேசமயம் அதற்கு இணையான இன்னொரு முக்கியத்துவமான வேடத்தில் திரிஷாவும் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
தனது கேரக்டர் குறித்து திரிஷா வெளியிட்டுள்ள செய்தியில், ''இந்த படத்தில் எங்களது ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும். என்றாலும் எனது கேரக்டரை சிலர் விமர்சிக்கவும் செய்வார்கள். இதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் இந்த வேடத்தில் நடிக்க நான் ஒப்பந்தம் ஆனேன்'' என்று கூறியுள்ள திரிஷா, இப்படத்திற்காக ''கமலும், மணிரத்னமும் எவ்வளவு புரிதலுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை அனைத்து நடிகர்களும் பார்க்க வேண்டும். அது கூட ஒரு மாயாஜாலம் போல்தான் இருந்தது'' என்றும் தெரிவித்திருக்கிறார்.