ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்-2' படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வந்தது. அங்கு படப்பிடிப்பு நடைபெற்றபோது சில மலையாள நடிகர்கள் மற்றும் அங்குள்ள அமைச்சர்கள் என பலரும் ரஜினியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்கள். அதோடு, ரஜினி கேரளா செல்லும்போது ரசிகர்கள் சாலையில் இருபுறமும் நின்று அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள்.
இந்நிலையில் தற்போது கேரளாவில் 'ஜெயிலர்-2' படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பி இருக்கிறார் ரஜினி. அப்போது விமான நிலையத்தில் அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ''ஜெயிலர்-2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் என்று நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார் ரஜினி. அதையடுத்து கூலி படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''அந்த படம் ரொம்ப நல்லா வந்திருக்கு'' என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டு செல்கிறார் ரஜினி.
இந்த ஜெயிலர்-2 படத்தில் ரஜினியுடன் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு மற்றும் கெஸ்ட் ரோலில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் மீண்டும் நடிக்கும் நிலையில், தெலுங்கு நடிகர் பால கிருஷ்ணாவும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இவர்கள் தவிர, எஸ்.ஜே.சூர்யா, பஹத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.