பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
தற்போது கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடிப்பில் 'தக்லைப்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம். ஜூன் 5ம் தேதி இந்த படம் திரைக்கு வரப்போகிறது. இப்படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சுகர் பேபி' என்ற இரண்டாவது பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடலில் திரிஷா நடித்துள்ளார். மேலும், தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டியை வைத்து ஒரு காதல் படத்தை மணிரத்னம் இயக்க போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், தக்லைப் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வரும் மணிரத்னம் அடுத்த படம் குறித்து கூறுகையில், ''அடுத்தபடியாக ஓகே கண்மணி படத்தை போன்று காதல் கதையில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் இன்னும் முடியவில்லை. அதையடுத்து அந்த கதைக்கு ஏற்ற மாதிரி நடிகர்கள் வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் சரியாக அமைந்தால் அடுத்தபடியாக அந்த படத்தை இயக்குவேன். அப்படி இல்லை என்றால் அந்த படத்தை பின்னர் இயக்குவேன்'' என்று தெரிவித்திருக்கிறார் மணிரத்னம். இதன்மூலம் புதுமுகங்களை வைத்து ஒரு காதல் படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.