தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தற்போது கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடிப்பில் 'தக்லைப்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம். ஜூன் 5ம் தேதி இந்த படம் திரைக்கு வரப்போகிறது. இப்படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சுகர் பேபி' என்ற இரண்டாவது பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடலில் திரிஷா நடித்துள்ளார். மேலும், தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டியை வைத்து ஒரு காதல் படத்தை மணிரத்னம் இயக்க போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், தக்லைப் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வரும் மணிரத்னம் அடுத்த படம் குறித்து கூறுகையில், ''அடுத்தபடியாக ஓகே கண்மணி படத்தை போன்று காதல் கதையில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் இன்னும் முடியவில்லை. அதையடுத்து அந்த கதைக்கு ஏற்ற மாதிரி நடிகர்கள் வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் சரியாக அமைந்தால் அடுத்தபடியாக அந்த படத்தை இயக்குவேன். அப்படி இல்லை என்றால் அந்த படத்தை பின்னர் இயக்குவேன்'' என்று தெரிவித்திருக்கிறார் மணிரத்னம். இதன்மூலம் புதுமுகங்களை வைத்து ஒரு காதல் படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.