தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள தக்லைப் என்ற படம் ஜூன் ஐந்தாம் தேதி திரைக்கு வரப்போகிறது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் அனைவருமே ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தக்லைப் படத்தில் இடம்பெற்ற கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு ஆகியோருடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கலந்துரையாடல் போன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது சிம்புவிடத்தில், நீங்கள் நடிக்கவிருந்த ஐம்பதாவது படத்தின் தயாரிப்பில் இருந்து கமல்ஹாசன் விலக, இப்போது நீங்களே தயாரிப்பதற்கு காரணம் என்ன? என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவரிடத்தில் கேட்கிறார்.
அதற்கு சிம்பு பதில் கொடுப்பதற்கு முன்பே கமல்ஹாசன் குறுக்கிட்டு, தக்லைப் படத்தில் சிம்புவை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரது ஐம்பதாவது படத்தின் தயாரிப்பை நாங்கள் நிறுத்தினோம். அந்த படத்தை எடுத்திருந்தால் தக்லைப் படத்தில் சிம்புவால் நடித்திருக்க முடியாது. அந்த வகையில், நாங்கள் சிம்புவை தியாகம் செய்தோம் என்று கூறுகிறார் கமல்.
அதையடுத்து இயக்குனர் கே.ஸ். ரவிக்குமார் உங்களது ஐம்பதாவது படத்தில் திருநங்கை வேடத்தில் நடிப்பதாக கேள்விப்பட்டேன். ஏற்கனவே இதே மாதிரி வேடத்தில் முன்பு சிவாஜி சார் நடித்திருந்தார். அதன் பிறகு கமல் சார், அஜித் போன்றவர்கள் நடித்தார்கள் என்று கூறுகிறார். அதற்கு சிம்பு பதில் அளிக்கையில், இந்த படத்திலும் திருநங்கை வேடம் இருக்கிறது. ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என்பதால் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது முந்தைய படங்களிலிருந்து ஒரு வித்தியாசமான பர்பாமென்ஸை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று பதில் கொடுக்கிறார் சிம்பு.