தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக்லைப்' படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் அளித்த ஒரு பேட்டியில், நடிப்பில் இருந்து எப்போது ஓய்வெடுப்பீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ''சினிமாவை எல்லோரும் பொழுதுபோக்காகதான் பார்க்கிறார்கள். ஆனால் அது ஒரு சக்தி வாய்ந்த ஊடகம்.
நாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் சமூகத்தில் உள்ள குறைகளை சரி செய்ய முடியும். பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதை கருத்தில் கொண்டுதான் கதைகளை நான் தேர்வு செய்து நடிக்கிறேன். இதை ஒரு பொறுப்பாகவே நான் பார்க்கிறேன். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற அந்த தீ எனக்குள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. அது அணையும் வரை நான் சினிமாவில் நடித்துக் கொண்டேதான் இருப்பேன்'' என்று பதில் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.