நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். படம் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட மிகப்பெரிய ஜாம்பவான்கள் பலர் படத்திற்கும் அபிஷன் ஜீவிந்துக்கும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா, அபிஷன் ஜீவிந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படக்குழுவினரை நேரில் அழைத்து படம் குறித்து தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சூர்யாவின் பாராட்டு குறித்து நெகிழ்ந்து போயுள்ள அபிஷன் ஜீவிந்த் இதுகுறித்து கூறும்போது, “இதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை.. சூர்யா சார் என் பெயரை சொல்லி அழைத்ததையும், டூரிஸ்ட் பேமிலி படத்தை அவர் எவ்வளவு விரும்பினார் என்று கூறியதையும் கேட்டபோது எனக்குள் ஏதோ ஒன்று நடந்தது. எனக்குள் இருக்கும் பையன் 100 முறை இதை பார்த்து விட்டான். இன்று பெருமிதத்தால் அழுகிறான்.. நன்றி சார்” என்று கூறியுள்ளார்.