ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'ரெட்டைச்சுழி' படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்த ஆரி அர்ஜூனா பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆரி நடித்து முடித்துள்ள அலேகா, பகவான், டிஎன் 43, மண் போன்ற படங்கள் வெளிவராமல் இருக்கிறது. சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்று விட்டார்.
இந்த நிலையில் விஜய் மில்டன் தெலுங்கு, தமிழில் இயக்கும் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நாயகனாக நடிக்கிறார். 'ரப் நோட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
ஆரி போலீஸ் அதிகாரியாக நடிப்பது குறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது “ஆரி பார்ப்பதற்கு அமைதியாக தோன்றினாலும், உள்ளுக்குள் நெருப்பு போன்றவர். அந்த அமைதி தீ இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக இருந்தது. இது வெறும் சாதாரண காவலர் வேடமல்ல , உணர்ச்சிகளால் நிரம்பிய, பன்முகத்தன்மை கொண்ட நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதற்கேற்ப ஆரி சரியான தேர்வாக இருந்தார்” என்றார்.