தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். தமிழில் சூரி, சசிகுமார் ஆகியோருடன் இணைந்து 'கருடன்' படத்திலும் நடித்துள்ளார். அவர் மீது அவருடைய மேனேஜர் விபின் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த வாரம் மலையாளத்தின் மற்றொரு முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடித்த 'நரிவேட்டா' படம் வெளிவந்தது. அந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் விபின். அதனால், கோபமடைந்த உன்னி முகுந்தன், அவரது மேனேஜர் விபினை வார்த்தைகளாலும், அடித்தும் காயப்படுத்தியுள்ளார் என புகாரில் உள்ளதாம்.
புகார் அளித்த பின்பு, செய்தியாளர்களை சந்தித்த விபின் இது பற்றி கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உன்னி முகுந்தன் தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை சொல்லப்படவில்லை. மலையாள சினிமா உலகில் இளம் நடிகர்களுக்கு இடையில் இப்படி ஒரு பொறாமை இருக்கிறதா என ஆச்சரியப்பட வைத்துள்ளது.
உன்னி முகுந்தன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'மார்க்கோ' படம் 100 கோடி வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது.