ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ரவிமோகன்-பாடகி கெனீஷா காதல் விவாதபொருளாகி இருக்கிறது. ரவிமோகன் பற்றி கடுமையாக விமர்சித்து ஆர்த்தி சில அறிக்கைகள் வெளியிட்டிருந்தார். இருவருமே ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் கண்டித்தது.
பாடகி கெனீஷா 'என்னை பற்றி அவதூறு பதிவுகளை 48 மணி நேரத்தில் நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சமூக வலைத்தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு உள்ள அவதூறு கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு ரவி மோகன் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் “நடிகர் ரவி மோகன் திருமண சர்ச்சை தொடர்பான அனைத்து அவதூறு செய்திகளையும் 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும். பேஸ்புக், எக்ஸ், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் என அனைத்து தளங்களுக்கும் இது பொருந்தும். அப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த பதிவுகள் நீக்கப்படவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என குறிப்பிடப்பட்டு உள்ளது.