ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தை இவ்வருட தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது அந்தபடம் சற்று முன்னதாகவே அக்டோபர் 1ம் தேதியே வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த தேதியில் தனுஷின் இட்லி கடை படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டில் இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனும் சிக்கினார். இதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அதனால் அன்றைய தேதியில் சூர்யா 45 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனராம்.