சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
இந்திய அளவில் சினிமா இசை என்பது இப்போது அதிக வருவாய் தரும் ஒரு துறையாக மாறிவிட்டது. யு டியூப், இசை இணைய தளங்கள், மொபைல் நெட்வொர்க் உள்ளிட்ட பல தளங்களின் மூலம் சினிமா பாடல்களுக்கான வருவாய் கிடைத்து வருகிறது. அதனால், தங்களது படங்களில் அதிரடியான, உடனடியாக ஹிட் ஆகக் கூடிய பாடல்களை உருவாக்குவதில் இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோருக்கு அதிக நெருக்கடி உள்ளது. இதன் காரணமாக இசையமைப்பாளர்களின் சம்பளம் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் அனிருத் நம்பர் 1 இடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவருடைய சம்பளம் 15 கோடி என்கிறார்கள். அவர் இசையமைக்கும் படங்களின் உரிமையும் அந்த விலையை விடவும் அதிகம் போவதால் அந்த சம்பளத்தைக் கொடுக்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம். அவருக்குப் பிறகு தேவி ஸ்ரீ பிரசாத், தமன் உள்ளிட்டவர்கள் 10 கோடிக்கும் அதிகமாக வாங்குகிறார்களாம்.
அனிருத் இந்திய அளவில் பிரபலமாக உள்ளதால் அவருக்கு தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. ரஜினிகாந்த், ஷாரூக்கான் படங்களுக்கு இசையமைத்தும் அவருடைய ஸ்டார் அந்தஸ்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.