மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

கடந்த 2017ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் நித்திலன் சுவாமிநாதன். அந்த படத்தில் விதார்த், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பின்னர் கடந்தாண்டு மகாராஜா என்ற படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பாக்ஸ் ஆபிஸில் 190 கோடி வசூலித்தது. அதையடுத்து சீன மொழியிலும் வெளியிடப்பட்டு பெரிய அளவில் வசூலித்தது.
இந்த நிலையில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை நியூயார்க்கில் ஆஸ்கர் விருது பெற்ற பேடு மேன் என்ற படத்தின் ரைட்டர் அலெக்சாண்டர் டினெலாரிஸ் என்பவர் அழைத்து பாராட்டி இருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நித்திலன் சுவாமிநாதன், ‛‛இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. வீட்டுக்கே என்னை அழைத்து அன்பு காட்டியதற்கு மிக்க நன்றி'' என்று ஒரு பதிவு போட்டு உள்ளார்.