சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கடந்த 2017ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் நித்திலன் சுவாமிநாதன். அந்த படத்தில் விதார்த், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பின்னர் கடந்தாண்டு மகாராஜா என்ற படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பாக்ஸ் ஆபிஸில் 190 கோடி வசூலித்தது. அதையடுத்து சீன மொழியிலும் வெளியிடப்பட்டு பெரிய அளவில் வசூலித்தது.
இந்த நிலையில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை நியூயார்க்கில் ஆஸ்கர் விருது பெற்ற பேடு மேன் என்ற படத்தின் ரைட்டர் அலெக்சாண்டர் டினெலாரிஸ் என்பவர் அழைத்து பாராட்டி இருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நித்திலன் சுவாமிநாதன், ‛‛இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. வீட்டுக்கே என்னை அழைத்து அன்பு காட்டியதற்கு மிக்க நன்றி'' என்று ஒரு பதிவு போட்டு உள்ளார்.