சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு |
அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் பராசக்தி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில், மதராஸி படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது, சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்தை இயக்க முருகதாஸ் சென்று விட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தபோதே, சுதா கெங்கரா இயக்கும் பராசக்தி படத்திலும் நடிக்க தொடங்கினார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் தற்போது பராசக்தி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கி இருப்பதால் அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மதராஸி படத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். அப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. அடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்கப் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி மதராஸி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் .