கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
திருச்சிற்றம்பலம், காதலிக்க நேரமில்லை படங்களைத் தொடர்ந்து தற்போது இட்லி கடை, தலைவன் தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார் நித்யா மேனன். இவர் அளித்த ஒரு பேட்டியில், ரசிகர்களின் செயல்பாடு குறித்து தனது அதிருப்தி மனநிலையை வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அங்கு எங்களை பார்க்க கூடும் ரசிகர்கள் கை கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஒட்டி உரசியபடி நின்று செல்பி எடுக்கிறார்கள். விலகி நின்றாலும் கூட அவர்கள் நெருங்கியே வருகிறார்கள். நடிகைகள் என்றால் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இவர்கள் எளிதாக எங்களை தொடுவதற்கு நாங்கள் என்ன பொம்மைகளா? என்று கேள்வி எழுப்பி தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் நித்யா மேனன்.