சினிமா விழாக்களில் அரசியல்வாதிகள் : கோலிவுட்டில் புது டிரெண்ட் | பிளாஷ்பேக்: சென்னை மாகாணத்தை முதன் முதலில் 'தமிழ்நாடு' என்று அழைத்தது சினிமா | தீவிர முருக பக்தர் யோகிபாபு | பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி |
ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில் நாகேஷ் பேரன் பிஜேஷ் நடிக்கும் படம் 'வானரன்'. இந்த பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜ முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில் ''ராமன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது நெற்றியில் செந்துாரத்தால் சீதை நாமம் இட்டார், ராமபிரான் மீது அன்பு கொண்ட அனுமன் தனது உடல் முழுவதும் செந்துாரத்தை பூசிக்கொண்டார். ராமரை பற்றி பேசும்போது அனுமன் அங்கே இருப்பதாக சொல்வார்கள். இந்த விழாவிலும் அனுமன் இருப்பார். சென்சிபிள் ஆக படம் எடுக்க கூடாது. சென்ஸ் ஆக எடுக்கணும்.'' என்றார்.
நடிகை கஸ்துாரி பேசுகையில், ''வட இந்தியாவில், தெலுங்கில் வலதுசாரி சிந்தனை படங்கள் வந்து, வெற்றி பெறுகின்றன. தமிழகத்திலும் அந்த நிலை மாறும். தமிழ் சினிமாவில் ஒரு தரப்பு சிந்தனைகளை கேலி செய்கிறார்கள். ஒரு பிரிவினரை மட்டும் அதிகம் விமர்சனம் செய்கிறார்கள். அந்த பிரிவை சேர்ந்த ஆண்கள் என்றால் காமெடியாக சித்தரிக்கிறார்கள், பெண்கள் என்றால் ஒழுக்கம் கெட்டவளாக காண்பிக்கிறார்கள். இது தவறு. இனி பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒருவிலை, சின்ன பட்ஜெட் படங்களுக்கு குறைந்த விலை வைக்க வேண்டும்'' எனப் பேசினார்.