ஒரே வாரத்தில் காணாமல் போன 'மகுடம்' | சிரமத்தில் கிடைத்த சினிமா வாய்ப்பு, சீரிய நடிப்பால் உயர்ந்த 'காவியத் தலைவி' நடிகை சவுகார் ஜானகி | பறந்து போனது ‛புதிய பறவை' : சவுகார் ஜானகியின் திரை வாழ்க்கை | பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார் | ஷோலோ ஹீரோயினாக நடிக்கும் கவுரி கிஷன் | இப்படியும் ஒரு கூத்து : ரிலீஸிற்கு முன்பே ஓடிடியில் தவறாக வெளியான ஹாலிவுட் படம் | படத்தின் ரிலீஸ் தேதியையே டைட்டிலாக்கிய இயக்குனர் | ஓட்டலில் சக பாடகியுடன் நெருக்கம் : மனைவியிடம் கையும் களவுமாக மாட்டிய நாட்டுப்புற பாடகர் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் நடித்த லியாகத் அலிகான் | பிளாஷ்பேக் : போலந்து மொழியில் வெளியான முதல் தமிழ் படம் |

தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா நடிக்கும் 'குபேரா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அந்த விழாவில் 2018ல் இருந்து 'வட சென்னை பார்ட் 2' எப்ப என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று பேச ஆரம்பித்த தனுஷ், ஒரு கட்டத்தில் எமோஷனல் ஆனார்.
''என்னை பற்றி அதிக நெகட்டிவிட்டி செய்திகள் பரப்பப்படுகின்றன. அதிக வதந்தி வருகிறது. என் படங்கள் ரிலீஸ் ஆகும்பபோது இதை காம்பெய்ன் மாதிரி செய்கிறார்கள். ஆனால், என்னை வழி நடத்த என் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை என் வழித்துணை என்பேன். அவர்கள் தீ பந்தம் மாதிரி என்னை வழி நடத்துகிறார்கள். நாலு வதந்தி பரப்பி என்னை காலி பண்ணலாம்னு நினைக்காதீங்க. அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை. இப்ப, ஒரு செங்கலை கூட உங்களால் அசைக்க முடியாது. தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க. எண்ணம்போல்தான் வாழ்க்கை'' என்றார்.
தம்பிகளா என்று தனுஷ் சொன்னது யாரை? என்பதே இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.