ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' | 5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் | தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி | 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகளை வழங்குங்கள்: தமிழக அரசுக்கு கோரிக்கை | கர்நாடகாவில் 'தக்லைப்' வெளியிட வர்த்தக சபை அனுமதிக்கணும்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் | வெற்றி பயத்தில் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே | தக் லைப் விவகாரத்தால் கலக்கத்தில் ஜனநாயகன் | பிளாஷ்பேக்: சிவாஜி படத்திற்கு கதை எழுதி தயாரித்த என்.டி.ராமராவ் | சினிமா விழாக்களில் அரசியல்வாதிகள் : கோலிவுட்டில் புது டிரெண்ட் |
தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா நடிக்கும் 'குபேரா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அந்த விழாவில் 2018ல் இருந்து 'வட சென்னை பார்ட் 2' எப்ப என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று பேச ஆரம்பித்த தனுஷ், ஒரு கட்டத்தில் எமோஷனல் ஆனார்.
''என்னை பற்றி அதிக நெகட்டிவிட்டி செய்திகள் பரப்பப்படுகின்றன. அதிக வதந்தி வருகிறது. என் படங்கள் ரிலீஸ் ஆகும்பபோது இதை காம்பெய்ன் மாதிரி செய்கிறார்கள். ஆனால், என்னை வழி நடத்த என் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை என் வழித்துணை என்பேன். அவர்கள் தீ பந்தம் மாதிரி என்னை வழி நடத்துகிறார்கள். நாலு வதந்தி பரப்பி என்னை காலி பண்ணலாம்னு நினைக்காதீங்க. அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை. இப்ப, ஒரு செங்கலை கூட உங்களால் அசைக்க முடியாது. தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க. எண்ணம்போல்தான் வாழ்க்கை'' என்றார்.
தம்பிகளா என்று தனுஷ் சொன்னது யாரை? என்பதே இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.