வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா நடிக்கும் 'குபேரா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அந்த விழாவில் 2018ல் இருந்து 'வட சென்னை பார்ட் 2' எப்ப என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று பேச ஆரம்பித்த தனுஷ், ஒரு கட்டத்தில் எமோஷனல் ஆனார்.
''என்னை பற்றி அதிக நெகட்டிவிட்டி செய்திகள் பரப்பப்படுகின்றன. அதிக வதந்தி வருகிறது. என் படங்கள் ரிலீஸ் ஆகும்பபோது இதை காம்பெய்ன் மாதிரி செய்கிறார்கள். ஆனால், என்னை வழி நடத்த என் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை என் வழித்துணை என்பேன். அவர்கள் தீ பந்தம் மாதிரி என்னை வழி நடத்துகிறார்கள். நாலு வதந்தி பரப்பி என்னை காலி பண்ணலாம்னு நினைக்காதீங்க. அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை. இப்ப, ஒரு செங்கலை கூட உங்களால் அசைக்க முடியாது. தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க. எண்ணம்போல்தான் வாழ்க்கை'' என்றார்.
தம்பிகளா என்று தனுஷ் சொன்னது யாரை? என்பதே இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.