நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் புதிய படங்கள் வெளியாகும் போது டிக்கெட் கட்டண உயர்வு கோரி அந்த மாநில அரசுகளிடம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்பின் அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படத்திற்கேற்றபடி டிக்கெட் கட்டண உயர்வுக்கு அனுமதி அளிப்பார்கள்.
இதுநாள் வரையில் தயாரிப்பாளர்களே நேரடியாக ஆந்திர மாநில அரசுக்கு விண்ணப்பித்து வந்தார்கள். இனி, அப்படி செய்யக் கூடாது, சம்பந்தப்பட்ட சங்கங்கள் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியிருந்தார். அதன்படி அவர் நடித்து இந்த மாதம் 12ம் தேதி வெளியாக உள்ள 'ஹரிஹர வீரமல்லு' படத்திற்காக அதன் தயாரிப்பாளர் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை மூலம் ஆந்திர மாநில அரசுக்கு விண்ணப்பித்துள்ளார். அதே சமயம், தெலங்கானா அரசுக்கு நேரடியாகவே விண்ணப்பித்துள்ளார்.
அவரது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு டிக்கெட் கட்டண உயர்வுக்கான அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவன் கல்யாண் பிறப்பித்த உத்தரவை அவர் நடித்த முதல் படமே பின் தொடர்வது ஒரு ஆச்சரிய ஒற்றுமை.