தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருது வழங்கி வந்தது. ஆனால் கடந்த 2016ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படவில்லை. இவற்றை உடனே வழங்க வேண்டும் என்று நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து, தமிழ் திரைப்படங்களின் வளர்ச்சிக்கு உதவியதற்காக முதல்வருக்கு நன்றி. அதே போன்று தமிழ் திரைப்படங்களுக்கான, தமிழக அரசின் விருதுகள் மற்றும் தமிழக அரசின் மானியம் வழங்குவதற்கு 2016 வருடம் முதல் 2022 வரைக்கான, விண்ணப்பங்கள் பெறப்பட்டு திரைப்படங்களும் அரசு உருவாக்கிய குழுக்கள் மூலம் பார்க்கப்பட்டன. ஆனால், இந்த ஏழு வருடத்திற்கான விருதுகளும், மானியங்களும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
தமிழ் திரைப்பட துறையை சார்ந்த பல கலைஞர்களும், தயாரிப்பாளர்களும், தமிழக அரசின் விருதுகளுக்காகவும், அரசு வழங்கும் மானியத்திற்காகவும் பல வருடங்களாக காத்திருக்கிறார்கள். தமிழ் திரைப்பட துறைக்கு, நிலுவையில் உள்ள 7 வருடத்திற்கான தமிழக அரசின் விருதுகளையும், திரைப்படங்களுக்கான மானியத்தையும் விரைவில் வழங்கி, திரைப்படத் துறையும் வளர்ச்சி அடைய உதவுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
2025ம் வருடத்தின் ஐந்து மாதங்கள் முடிந்த நிலையில், 2023 மற்றும் 2024 வருடங்களுக்கான தமிழக அரசின் விருதுகள் மற்றும் மானியத்திற்கான அறிவிப்புகள் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். அவைகளும், துரிதமாக அறிவிக்கப்பட்டு, விருதுகளும், மானியமும் இந்த இரண்டு வருடங்களுக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.