சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கமல்ஹாசன் நடத்தி வரும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதாக அடிக்கடி மோசடி புகார் வரும், இதுகுறித்து ராஜ்கமல் இன்டர்நேஷனல் அடிக்கடி எச்சரிக்கை செய்யும். இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கமல்ஹாசனின் இளைய மகளும், நடிகையும், ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவருமான அக்ஷரா ஹாசன் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “இப்ராகிம் அக்தர் என்ற நபர் என்னுடைய பெயர் மற்றும் என் குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, ஊட்டி பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். மேலும், எங்களது பெயரை பயன்படுத்தி, நாங்கள் சினிமா தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று பொய்யான தகவலை தெரிவித்து வருகிறார். அவர் கூறும் அனைத்தும் தவறானவை. எங்களுக்கும் அவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இந்த விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தயவுசெய்து எல்லோரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த நபருடன் தொடர்பு கொள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார்.