தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகர் தியாகராஜன் தயாரிப்பு, இயக்கத்தில் அவர் மகன் பிரசாந்த், மீரா ஜாஸ்மின் நடிப்பில், 2011ல் வெளியான படம் மம்பட்டியான். அந்த படத்தில் தமன் இசையில், நா.முத்துக்குமார் வரிகளில் இடம் பெற்ற மலையுரு நாட்டாமை , மனச காட்டு பூட்டாம உன்ன போல யாரும் இல்ல மாமா .என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. இன்றைக்கும் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் திருமண வீடுகளில் இந்த பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மணமகன், மணமகள் இந்த பாடலுக்கு உற்சாகமாக ஆடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டூரிஸ்ட் பேமிலி படத்திலும் இந்த பாடல் முக்கியமான காட்சியில் இடம் பெறுகிறது. அந்த படத்தில் பயன்படுத்த முறைப்படி படக்குழு அனுமதி பெற்றதா? அப்படி அனுமதி வாங்காத பட்சத்தில் நீங்க நோட்டீஸ் அனுப்பினீர்களா என்று நடிகர் தியாகராஜனிடம் கேட்டபோது ''அந்த பாடல் ஹிட்டானது சந்தோஷம். இன்றும் உலக நாடுகளில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பது இன்னும் சந்தோஷம். டூரிஸ்ட் பேமிலி படத்தில் இடம் பெற்றது கூடுதல் சந்தோஷம். என்னிடம் யாரும் முறைப்படி அந்த பாடலை பயன்படுத்த அனுமதி வாங்கவில்லை.
டூரிஸ்ட் பேமிலி ஹிட்டான பின்னரும் கூட யாரும் நன்றி தெரிவிக்கவில்லை. ஆனாலும், என் பாடல் இப்போது வந்திருக்கும் படத்திலும் ஒலித்து இருப்பதை விட வேறு என்ன வேண்டும். திருமண வீடு, விசேஷ வீடுகளில் பலர் என் பாடலை மகிழ்ச்சிக்காக பயன்படுகிறார்கள். அதை பார்த்து நானும் மகிழ்கிறேன். அதை தொடர்ச்சியாக தங்கள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தி பாடலை உயிர்ப்போடு வைத்து இருப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அது தொடரட்டும்.
யாருக்கும் நோட்டீஸ் அனுப்பமாட்டேன். தமன் இசையமைத்த அந்த பாடலை நா.முத்துக்குமார் எழுதியிருந்தாலும், முதல் சில வரிகளை நான்தான் எழுதினேன். குழந்தை வளர்ந்து வெற்றி பெற்றால் பெற்றோர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ, அதேபோல் அந்த பாடல் பிரபலமாவதால் எனக்கு மகிழ்ச்சி' என்று சிரிக்கிறார் நடிகர் தியாகராஜன்.