வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

நடிகை ரம்பா சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். கனடாவில் வசித்தவர் இப்போது சினிமாவில் நடிக்க வேண்டும். படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்துவிட்டார் என தகவல். ரம்பா பட கம்பெனியில் நடிக்க, படம் இயக்க, பணியாற்ற பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். காரணம், ரம்பாவின் கணவருக்கு சில ஆயிரம் கோடி சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், இன்றைய சினிமா மோசமாக இருக்கிறது. படம் தயாரிப்பது ரிஸ்க். உங்க அண்ணன் கூட படம் தயாரித்துதான் கடனாளி ஆனார். ஆகவே, கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டும் அவர் நலம் விரும்பிகள் அட்வைஸ் செய்கிறார்களாம். ஜோதிகா, சிம்ரன் மாதிரி ரீ-என்ட்ரி ஆக வேண்டும். பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ரம்பா மனதில் இருக்கிறதாம். இதற்கிடையில் தனது 49வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியிருக்கிறார் ரம்பா.