சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகை ரம்பா சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். கனடாவில் வசித்தவர் இப்போது சினிமாவில் நடிக்க வேண்டும். படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்துவிட்டார் என தகவல். ரம்பா பட கம்பெனியில் நடிக்க, படம் இயக்க, பணியாற்ற பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். காரணம், ரம்பாவின் கணவருக்கு சில ஆயிரம் கோடி சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், இன்றைய சினிமா மோசமாக இருக்கிறது. படம் தயாரிப்பது ரிஸ்க். உங்க அண்ணன் கூட படம் தயாரித்துதான் கடனாளி ஆனார். ஆகவே, கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டும் அவர் நலம் விரும்பிகள் அட்வைஸ் செய்கிறார்களாம். ஜோதிகா, சிம்ரன் மாதிரி ரீ-என்ட்ரி ஆக வேண்டும். பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ரம்பா மனதில் இருக்கிறதாம். இதற்கிடையில் தனது 49வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியிருக்கிறார் ரம்பா.