வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் தக் லைப். கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படம் திரைக்கு வந்ததில் இருந்து ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. சோசியல் மீடியாவில் கடுமையான ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
அதோடு முதல் நாளில் இந்திய அளவில் இந்த தக்லைப் படம் 17 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் 7.15 கோடியாக குறைந்தது. அதையடுத்து மூன்றாவது நாள் பக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மூன்றாவது நாளில் தக்லைப் படம் தமிழ்நாட்டில் 6.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இந்திய அளவில் நேற்று மூன்றாவது நாளில் 7.50 கோடி வசூலித்து இருக்கிறது.
இப்படி விடுமுறை நாளிலும் தக்லைப் படத்தின் வசூல் அதிகரிக்காதது படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதோடு இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதியின் ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்தார்கள். ஆனால் இப்போது படத்தின் வசூல் அதில் பாதியையாவது கூட எட்டிப் பிடிக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.