சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தெலுங்குத் திரையுலக இயக்குனராக இருந்தாலும் பான் இந்தியா இயக்குனராக அடையாளத்தை ஆரம்பித்து வைத்தவர் ராஜமவுலி. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாபுவின் 29வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்புக்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்கள்.
இந்தப் படத்தில் தமிழ் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளார் என கடந்த சில மாதங்களாகவே தகல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அது எதுவுமே உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் வில்லனாக நடிக்க தற்போதைய சூழலில் விருப்பமில்லை என விக்ரம் மறுத்துவிட்டாராம். அதனால், அவருக்குப் பதிலாக வேறொரு நடிகருடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. மாதவன் உள்ளிட்ட சில நடிகர்கள் அந்தப் பட்டியலில் இருக்கிறார்களாம். வலுவான ஒரு கதாபாத்திரம் என்பதால் அதற்கான தேர்வு கொஞ்சம் தாமதமாக நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.