தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
தெலுங்குத் திரையுலக இயக்குனராக இருந்தாலும் பான் இந்தியா இயக்குனராக அடையாளத்தை ஆரம்பித்து வைத்தவர் ராஜமவுலி. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாபுவின் 29வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்புக்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்கள்.
இந்தப் படத்தில் தமிழ் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளார் என கடந்த சில மாதங்களாகவே தகல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அது எதுவுமே உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் வில்லனாக நடிக்க தற்போதைய சூழலில் விருப்பமில்லை என விக்ரம் மறுத்துவிட்டாராம். அதனால், அவருக்குப் பதிலாக வேறொரு நடிகருடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. மாதவன் உள்ளிட்ட சில நடிகர்கள் அந்தப் பட்டியலில் இருக்கிறார்களாம். வலுவான ஒரு கதாபாத்திரம் என்பதால் அதற்கான தேர்வு கொஞ்சம் தாமதமாக நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.