மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
மலையாள திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகரான சீனிவாசனின் மகன்கள் தான் வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன். இதில் வினித் சீனிவாசன் நடிகராகவும் இயக்குனராகவும் கேரளாவையும் தாண்டி தமிழகம் வரை நன்கு அறிமுகம் ஆகிவிட்டார். அண்ணன் வழியிலேயே தம்பியும் நடிகராக மாறி பின்னர் இயக்குனராகவும் மாறினார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, நிவின்பாலி இணைந்து நடித்த 'லவ் ஆக்சன் ட்ராமா' என்கிற படத்தை இவர் இயக்கினார். அந்த படம் வெற்றி படமாக அமைந்தாலும் அடுத்தடுத்து படங்களை இயக்காமல் பிஸியான நடிகராக தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் திலீப் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணமும் உண்டு. கடந்த மாதம் திலீப் நடிப்பில் அவரது 150வது படமாக 'பிரின்ஸ் அன்ட் பேமிலி' என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் திலீப்பின் தம்பியாக நடித்திருந்தார் தியான் சீனிவாசன். அது மட்டுமல்ல, இதற்கு அடுத்ததாக திலீப் நடித்து வரும் 'பா பா பா' படத்திலும் அவருடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல நட்பு உருவாகிவிட்டது. இந்த சமயத்தில் தியான் சீனிவாசன் சொன்ன கதை திலீப்பிற்கு பிடித்துப்போய் விட்டதால் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்துள்ளாராம் திலீப்.