சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பழம்பெரும் பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இசைத் துறையில் சாதித்தாலும் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. பாடகராகவே சில மலையாள படங்களில் தோன்றிய அவர் 'அவன்' என்ற மலையாளப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் வரவேற்பை பெறவில்லை, பிறகு தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வந்ததால் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு 'படை வீரன்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அந்த படமும் பெரிதாக அவருக்கு உதவவில்லை. அதன் பிறகு 'சாலமன்' என்ற 3டி படத்தில் நடித்தார், பான் இந்தியா படமாக வெளியான இதுவும் சரியாக போகவில்லை.
இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது ராம் இயக்கத்தில் 'பறந்து போ' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதில் அவர் நாயகன் மிர்ச்சி சிவாவின் நண்பராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படமாவது விஜய் யேசுதாசுக்கு நல்லதொரு இடத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.