பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? |
'தில்லுமுல்லு' படம் ரஜினியின் காமெடியால் வெற்றி பெற்றதை தொடர்ந்து பஞ்சு அருணாசலம் அதே பாணியில் ரஜினியை காமெடி ஹீரோவாக்கி தயாரித்த படம் 'தம்பிக்கு எந்த ஊரு'. படத்தின் கதை, வசனத்தையும் பஞ்சு அருணாசலமே எழுதினார். ராஜசேகர் இயக்கினார். மாதவி நாயகியாக நடித்திருந்தார்.
ஊதாரித்தனமாக சுற்றுத் திரியும் தன் மகனை பணக்கார தந்தை தனது நண்பன் வீட்டில் தன் அடையாளத்தை மறைத்து ஒரு வருடம் வேலை செய்து காட்டு என்று சவால் விடுவார். அந்த சவாலை ரஜினி எப்படி செய்து முடிக்கிறார் என்பது கதை. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு விட்டது. படத்தில் இடம்பெறும் 5 பாடல்களில் 4 பாடல்கள் ரிக்கார்டிங் முடிந்து படப்பிடிப்பும் முடிந்தது. ஒரு பாடல் பாக்கி உள்ள நிலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இளையராஜா. அவருக்கு அறுவை சிகிச்சையும் முடிந்தது. அவரால் அப்போது பேச முடியாத நிலை.
தன்னால் படம் தாமதமாக கூடாது என்று கருதிய இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை மருத்துவமனைக்கு அழைத்து வாயால் விசில் அடித்து பாடலை பாடி காட்டினார். அதைக் கொண்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அந்த பாடலை பாடினார். பெண் குரலில் ஜானகி பாடினார். 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்...' என்ற பாடல்தான் அது. இப்போது கேட்டாலும் மனதை உருக்கும் காதல் பாடல் அது.