கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
'தில்லுமுல்லு' படம் ரஜினியின் காமெடியால் வெற்றி பெற்றதை தொடர்ந்து பஞ்சு அருணாசலம் அதே பாணியில் ரஜினியை காமெடி ஹீரோவாக்கி தயாரித்த படம் 'தம்பிக்கு எந்த ஊரு'. படத்தின் கதை, வசனத்தையும் பஞ்சு அருணாசலமே எழுதினார். ராஜசேகர் இயக்கினார். மாதவி நாயகியாக நடித்திருந்தார்.
ஊதாரித்தனமாக சுற்றுத் திரியும் தன் மகனை பணக்கார தந்தை தனது நண்பன் வீட்டில் தன் அடையாளத்தை மறைத்து ஒரு வருடம் வேலை செய்து காட்டு என்று சவால் விடுவார். அந்த சவாலை ரஜினி எப்படி செய்து முடிக்கிறார் என்பது கதை. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு விட்டது. படத்தில் இடம்பெறும் 5 பாடல்களில் 4 பாடல்கள் ரிக்கார்டிங் முடிந்து படப்பிடிப்பும் முடிந்தது. ஒரு பாடல் பாக்கி உள்ள நிலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இளையராஜா. அவருக்கு அறுவை சிகிச்சையும் முடிந்தது. அவரால் அப்போது பேச முடியாத நிலை.
தன்னால் படம் தாமதமாக கூடாது என்று கருதிய இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை மருத்துவமனைக்கு அழைத்து வாயால் விசில் அடித்து பாடலை பாடி காட்டினார். அதைக் கொண்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அந்த பாடலை பாடினார். பெண் குரலில் ஜானகி பாடினார். 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்...' என்ற பாடல்தான் அது. இப்போது கேட்டாலும் மனதை உருக்கும் காதல் பாடல் அது.