தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இப்போதெல்லாம் ஒரு பாடல் காட்சிக்கு, அல்லது ஒரு சண்டை காட்சிக்கு 5 முதல் 10 கேமராக்கள் வரை பயன்படுத்துகிறார்கள். ஆனால் 1960கள் வரை பெரும்பாலும் காட்சிகளுக்கு ஒரு கேமராவும், பாடல் மற்றும் சண்டைக்கு இரண்டு கேமராக்களும் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள்.
1950 மற்றும் அதற்கு முன்பு அரிதாக இரண்டு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு காரணம் அன்று கேமராக்கள் குறைவாக இருந்ததும், அதன் வாடகை மிகவும் அதிகமாக இருந்ததும் ஆகும். அதோடு பிலிம் சுருளுக்கும் டிமாண்ட் இருந்தது.
இப்படியான சூழ்நிலையில் 1950ம் ஆண்டு வெளிவந்த 'மந்திரிகுமாரி' படத்தில் இடம் பெற்ற காலத்தால் அழியாத பாடலான 'வாராய்... நீ வாராய்... நான் போகுமிடமெல்லாம் நீ வாராய்...' என்ற பாடல் முதன் முறையாக மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கப்பட்டது. வில்லன் தன் மனைவியை ஆசையாக பாடி மகிழ்வித்து மலை உச்சிக்கு கூட்டிச் சென்று தள்ளி விட்டு அவளை கொல்வதுதான் பாடலின் சூழல். அவன் அவளை கொல்லப்போவதை மறைமுகமாக பாடலில் உணர்த்துவான், மனைவி அதை புரிந்து கொள்ளாமல் இயற்கையை ரசித்து பாடுவாள்.
இந்த பாடல் காட்சி ஏற்காட்டு மலையில் தற்போது 'லேடீஸ் ஷீட் 'என்று அழைக்கப்படும் பகுதியில் நடந்தது. இப்போது அது சுற்றுலாத்தலமாக இருந்தாலும் அப்போது அடர்ந்த காடாக இருந்தது. சரியான பாதைகள்கூட இல்லை. ஆனால் இயக்குனர் டங்கன் அங்குதான் படமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து படமாக்கினார்.
பாடலுக்காக சிறிது தூரம் சாலை போடப்பட்டது. பின்னர் கரடுமுரடான பாதையில் கதை மாந்தர்களை நடக்க விட்டு படமாக்கப்பட்டது. மலையின் கீழ் ஆரம்பிக்கும் பாடல் மலை முகட்டில் முடியும். இந்த காட்சிக்காக ஒளிப்பதிவாளர் ஜே.ஜி.விஜயம் 3 கேமராக்களை பயன்படுத்தினார். இந்த பாடலை திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடி இருந்தனர். ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார். எம்.ஜி.ஆர், ஜி.சகுந்தலா, நம்பியார், எஸ்.ஏ.நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படம் முடிந்து முதல் காப்பியை பார்த்த தயாரிப்பாளர் மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம். 'வாராய் நீ வாராய் பாடலை நீக்கி விடலாம். அது படத்தின் வேகத்திற்கு தடையாக இருக்கிறது' என்ற கருத்தை கூறினார். ஆனால் இயக்குனர் டங்கனும், இசை அமைப்பாளர் ஜி.ராமநாதனும் ஒரு நாள் மட்டும் பாடலோடு படம் வெளிவரட்டும், ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீக்கி விடலாம் என்றார்கள். பாடலோடு படம் வெளியானது. அந்த பாடல் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமானதுடன் காலத்தை கடந்தும் நிற்கிறது.