தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'குபேரா'. படத்தின் 'பிப்பி பிப்பி டம் டம் டம்' என்ற பாடலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “குபேரா, ஒரு மாறுபட்ட படம், ஸ்பெஷலான படம். நிச்சயமா வழக்கமான படமில்லை. என் மனசுக்கு மிக நெருக்கமான படம், இங்க இருக்கிறவங்களும் இதை ஏத்துப்பாங்கன்னு நினைக்கிறேன். இந்தப் படத்துக்கான அனுபவம் மிகவும் சிறப்பான ஒன்று, விசித்திரமானதும் கூட. குப்பைக் கிடங்கு, குப்பை வண்டி என நிறைய சொல்லலாம். குப்பைக் கிடங்குல நானும், ராஷ்மிகாவும் ஆறேழு மணி நேரம் இருந்தோம். அப்ப அவங்க, தனக்கு எந்த நாற்றமும் வரலன்னு சொன்னாங்க, ஆனா என்னால அங்க நிக்கவே முடியலை, அந்த அளவுக்கு சிரமமா இருந்தது. அதையெல்லாம் மீறி நடிச்சோம். ஒவ்வொரு அனுபவமும் நமக்கு ஒரு பாடத்தைக் கத்துக் கொடுக்கும்.
நான் இந்தப் படத்துல பிச்சைக்காரனா நடிச்சிருக்கேன். அதுக்காக நிறைய ஆராய்ச்சி பண்ணேன், ஹோம் வொர்க் பண்ணேன், வெயில்ல நின்னேன்னுலாம் பொய் சொல்ல மாட்டேன். நான் ஜஸ்ட் படப்பிடிப்புக்குப் போனேன். அங்க டைரக்டர் சேகர் கம்முலா என்ன சொன்னாரோ அதை செஞ்சேன். சேகர் சார் திறமையானவர். அவர் எல்லாத்தையும் கத்துக் கொடுத்தாரு. ஒரு நல்ல மனிதர், தூய்மையானவர், நல்ல மனம் கொண்டவர். அவராலதான் இந்தப் படத்தைப் பண்ணேன். வெறும் 20 நிமிடத்துல இந்தக் கதையைச் சொன்னாரு. உடனே, நடிக்க சம்மதம் சொன்னேன்.
நான் ரொம்ப கீழான நிலைமையில இருந்துதான், இப்ப இந்த நிலைக்கு கடவுள் அருளால் வந்திருக்கேன். இந்தப் படத்தால அந்த உலகத்தைத் திரும்பிப் பார்த்தேன். அது எனக்கு சில விஷயங்களைக் கத்துக் கொடுத்தது, நோஸ்டால்ஜிக்காவும் இருந்தது. என்னோட சின்ன வயசுக்கும் இந்தப் படம் என்னைக் கொண்டு போச்சு, இப்படி பல காரணங்களுக்காக இந்தப் படத்துக்கு நான் நன்றி சொல்லணும்,” என்று பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா, ராஷ்மிகா இருவரும் தனுஷின் ஈடுபாட்டைப் பற்றிப் பாராட்டினர். ஜுன் 20ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது.