ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் ஆரம்பமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்லு அர்ஜுனின் 22வது படமாகவும், அட்லியின் 6வது படமாகவும் தயாராகி வரும் இப்படத்தின் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிப்பதாகக் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.
படத்தில் மற்ற கதாநாயகிகளாக மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோரும் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் உண்டு. இன்று முதல் அல்லு அர்ஜுன், மிருணாள் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். தீபிகா படுகோனே ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம்.
சரித்திர காலம் மற்றும் இந்தக் காலம் கலந்து உருவாக்கப்பட்டுள்ள பேன்டஸி டைப் படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'புஷ்பா 2' படத்தின் மூலம் அல்லு அர்ஜுனும், 'ஜவான்' படத்தின் மூலம் அட்லியும் 1000 கோடி கிளப்பில் உள்ளனர். இருவரும் இணையும் இந்தப் படம் எத்தனை கோடி கிளப்பில் இணையும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.